நீ எப்போடீ இந்த புடவை எடுத்தே? தீபாவளிக்கா? இல்லை பொங்கலுக்கா? கடைக்காரர் குனிஞ்சுக்கிட்டு பில் போடும் போது. | ||||
என் மனைவி கிட்ட எனக்கு பிடிச்சதே அவளோட பொய் சொல்லாத குணம்தான்.. இல்லையே...நேற்றுகூட என் மனைவிகிட்ட 'என் புருஷன் அழகுன்னு' சொன்னாளாமே | ||||
மனைவி - பால் எல்லாவற்றையும் பூனை குடிக்கும்வரை என்ன பண் ணிட்டீருந்தீங்க? கணவன் - இந்த பூனையும் பால் குடிக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தேன். | ||||
மனைவி-(கணவனிடம்)என்ன அநியாயம்..பாருங்க..நம்ம பையன் மேத்ஸ் ஹோம் ஒர்க் சரியா செய்யலைன்னு..உங்கப்பாவை கூட்டிக்கிட்டு வான்னு சொன்னாங்களாம்...நியாயமாப்பார்த்தா...நீங்க தானே உங்கப்பாவை கூட்டிக்கிட்டு போகணும். | ||||
உன் புருஷன் எப்போது சாப்பிட்டாலும் சாப்பாட்டை புகழ்ந்து கொண்டே சாப்பிடுகிறாரே ஏன்? அது அவரே சமைத்தது அல்லவா | ||||
கணவனும் மனைவியும் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தார்கள். அங்கிருந்த குரங்குகளைப் பார்த்து, கணவன் : உன்னுடைய சொந்தக்காரங்க இங்கே இருக்காங்க! மனைவி : ஆமாம். என்னுடைய மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார். | ||||
ஏண்டி வீட்டுக்காரர் பயங்கர கஞ்சத்தனம்... எப்படி...? தலைக்கு டை அடிச்சா 50 ரூபா செலவு ஆகுதுன்னு ஒரே செலவா கறுப்பு விக் வாக்கி மாட்டிக்கிட்டார். | ||||
என் மனைவி எனக்கு அடங்கி ஒடுங்கி நடக்க நீங்க தான் சாமி அரு ள் புரியணம் அது முடியாமத்தான் நானே சாமியாராகி விட்டேன் மகனே. | ||||
மனைவி: ஏங்க! நான் கார்ல போறப்ப நாலு அஞ்சு தடவை இந்த டிரைவர் ஆக்சிடென்ட் பண்ணப் பார்த்தான்! உடனே மாத்துங்க! கணவன்: விடும்மா! இன்னும் ஒரே ஒரு சான்ஸ் கொடுத்துப் பார்ப்போம்! | ||||
தனலட்சுமி விஜயனை மணந்து கொண்டதால அவள் அவனை இலட்ச ரதிபதியா ஆக்கிட்டாள். ஓ அப்படியா? தனலட்சுமி வருவதற்கு முன் விஜயன் எப்படி இருந்தான். கோடீஸ்வரனாக இருந்தான்...! |
தினமும் மாலை 6 மணிக்கு என் வாய்க்கு வந்தபடி மனைவியை திட்டுவேன் அதென்ன 6 மணி கணக்கு அப்போதானே அவ ஷாப்பிங்க்னு வெளியே போவா.. | ||||
எப்போதும் தமிழில் அச்சனை. எங்கே? என் வீட்டில். | ||||
என் மனைவி ஒரு மாதம் பிறந்த வீட்டிற்கு போயிருக்கா.. அதுக்கு சந்தொஷப்படாம ..வருத்தப்படறே.. அந்த ஒரு மாசம் இன்னியோட முடியறது.அதுதான் | ||||
உங்க வாழ்க்கையிலேயே உங்களுக்கு ரொம்ப பிடித்தமானவரைப் பற்றி கூறுங்க? அது நிச்சயம் என் மனைவிதான் சார் அடப் பயப்படாதீங்க சார் உண்மையைச் சொல்லுங்க. | ||||
உனக்கும்..உன் மனைவிக்கும் சண்டையா? கடைசிலே என்ன ஆச்சு நான் கொவிச்சுக்கிட்டு..பிறந்த வீடு வந்துட்டேன் | ||||
தமிழரசி : உன் கணவர் உன்னை கண்கலங்காமல் பார்த்துக்கிறாராதா சொல்லி ஆறுவருசமாக ரொம்ப கொடுமை படுத்துறதா சொல்றியே, வெளங்கல செல்வி : பெரும் ரோதனையாகப் போச்சு, வெங்காயம் உறிச்சா என் கண் கலங்கிவிடுமாம் அதனால் வெங்காயமே வாங்காமல் இந்த ஆறுவருசமாக ஓட்டிட்டார். | ||||
ஊருக்கு போய் சேர்ந்ததும் லெட்டர் போடு கமலா? ஏங்க? அப்பதான் எனக்கு முழு சுதந்திரமே கிடைச்சமாதிரி. | ||||
ஏண்டி பாத்ரூமை திறந்து வெச்சிட்டே குறிக்கிறே? யாராவது நான் குளிக்கிறதை எட்டிப் பார்த்தா, யார்னு உடனே கண்டுபிடிச்சிடலாமே...! | ||||
கணவன்: ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு! குடிக்க வெந்நீர் கொடு! மனைவி: ஏங்க இப்படி பயப்படுறீங்க? மூளைக் காய்ச்சல்தான் பரவுது! அது எப்பிடி உங்களுக்கு வரும்? | ||||
என் மனைவி காபின்னு விஷத்தைக் கொடுத்தாக் கூட நான் குடிச்சிடுவேன். அவ்வளவு நம்பிக்கையா? அவளோட குடும்பம் நடத்துறதை விட சாகறதே மேல். | ||||
மணிவண்ணன்
கயாக்காடு
1 கருத்துகள்:
இன்றைய வலைச்சத்தில் தங்களின் பதிவு http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_14.html
கருத்துரையிடுக